செய்திகள்

அறந்தாங்கி அருகே மர்ம காய்ச்சலுக்கு கொத்தனார் பலி

Published On 2017-09-22 13:59 GMT   |   Update On 2017-09-22 13:59 GMT
அறந்தாங்கி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொத்தனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அறந்தாங்கி:

அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் செந்தில் (வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வசந்தி (29) என்ற மனைவியும், மணிகண்டன் (7) என்ற மகனும், மணிமேகலை(5) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்திலுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவருக்கு காய்ச்சல் குறையவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று பரிதாபமாக இறந்தார். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கொத்தனார் இறந்த சம்பவம் சுப்பிரமணியபுரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News