செய்திகள்

பொன்னமராவதியில் தி.மு.க. பொதுக் கூட்டம்

Published On 2017-09-18 22:14 IST   |   Update On 2017-09-18 22:14:00 IST
பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் தெற்கு ஒன்றியம், பேரூர் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி சார்பில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரில் தெற்கு ஒன்றியம், பேரூர் மற்றும் மாவட்ட நெசவாளர் அணி சார்பில் திமுக பொதுக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு  மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முத்துக் குமார் தலைமைவகித்தார். திருமயம் எம்.எ.ல்ஏ ரகுபதி ஈரோடு இறைவன், பொன்னேரி சிவா, முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் ராஜீ ஆகியோர் பேசினார்கள்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ ஆலவயல் சுப்பையா, நகரச் செயலாளர் அழகப்பன், வடக்கு ஒன்றியச் செயலாளர் முத்து, மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா, பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், மணி முன்னாள் ஒன்றியச் செயலாளர்கள் அய்யாவு, ராமச்சந்திரன், அவைத் தலைவர் ராமு, முன்னாள் நகரச் செயலாளர் ராமன், நிர்வாகிகள் பழனிச்சாமி, ராஜா, கண்ணன், முரளிதரன், தட்சணாமூர்த்தி, தியாகு, வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றியச் செயலாளர் அடைக்கல மணி வரவேற்றார். முடிவில் நகரச் செயலாளர் அழகப்பன் நன்றி கூறினார்.

Similar News