செய்திகள்
கீரனூர் அருகே தடுப்பு சுவரில் பைக் மோதி அரசு பஸ் டிரைவர் பலி
கீரனூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கீரனூர்:
கீரனூரை அடுத்துள்ள வத்தனாக்கோட்டையை சேர்ந்தவர் பிச்சை முத்து (வயது 45). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். மாலை 4 மணி அளவில் கீரனூர் அருகே கிள்ளனூரை அடுத்து உள்ள பெரம்பூர் விலக்கு சாலையில் ஒரு வளைவில் சென்ற போது மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரின் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து பிச்சைமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்ததும் உடையாளிபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிச்சை முத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுகை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து போன பிச்சைமுத்துவுக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.