செய்திகள்

நீட் தேர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2017-09-07 11:45 GMT   |   Update On 2017-09-07 11:45 GMT
திருமயம் தாலுகா, நமணசமுத்திரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, நமணசமுத்திரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நமணசமுத்திரம் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் திருமா பாண்டியன் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா மரணத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை பாதிக்கும் நீட் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும், தமிழக அரசு மத்திய அரசு டன் போராடி நீட் தேர்வை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலைவேந்தன், அழகப்பன், துரைசாமி, அம்மையப்பன், உதயம்சிவா, ரமேஷ், சுடர் வளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்செல்வன் கண்டன உரை நிகழ்த்தினார். மாநில துணைச்செயலாளர் கலைமுரசு நன்றி கூறினார்.

Tags:    

Similar News