செய்திகள்

மூப்பனார் நினைவு நாள்: ஓ.பன்னீர்செல்வம்- தலைவர்கள் மலர் அஞ்சலி

Published On 2017-08-30 07:30 GMT   |   Update On 2017-08-30 07:30 GMT
ஜி.கே.மூப்பனாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன், மாபா. பாண்டியராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை:

ஜி.கே.மூப்பனாரின் 16-வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தின் பின்புறம் அமைந்துள்ள மூப்பனார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

காலை 9.30 மணி அளவில் மூப்பனாரின் மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் சர்வமத பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், கே.பி. முனுசாமி, ஜே.சி.டி. பிரபாகர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்.

த.மா.கா. மாநில நிர்வாகிகள் கத்திபாரா ஜார்த்தனன், விடியல் சேகர், முனவர்பாட்சா, சைதை நாகராஜன், டி.வி. முருகன், கே.டி.எஸ்.ராஜா, தி.நகர் கோதண்டன், சிவபால், மாநில இணை செயலாளர் பூந்தமல்லி ஜெயக்குமார், வேளச்சேரி மணிக்கண்ணன், மாநில பொதுச்செயலாளர்கள் ஞானசேகரன், ஜவகர்பாபு.

மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், ரவிச்சந்திரன், அருண்குமார், பிஜு சாக்கோ, மாவட்ட நிர்வாகிகள் நாஞ்சில் நேசய்யா, கிண்டி மம்மு, நரேஷ்குமார், மோகனகிருஷ்ணன், மடுவை சரவணன், ஈகை சரவணன், சாம்ராஜ், வடபழனி மகிழ்ணன்.

பகுதி தலைவர்கள் கோயில் பாஸ்கர், கோட்டூர் மதன கோபால், பாண்டி பஜார் பழனி, காரல் மாசிலா மணி, ஆலந்தூர் பாஸ்கர், நுங்கை வடிவேலு, வட்ட தலைவர்கள் சின்னமணி, மோகன், பாலாஜி, ஞானகுரு, ஈகை லோகநாதன், மடுவை சுந்தர்ராஜ், கிண்டிகுமார், தீனன், பக்கிரிசாமி, புனிதன், பத்மநாபன், பாரதிபாபு, சாந்தாராம் உள்பட ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.


நினைவு நாளையொட்டி இன்று ஏழைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மூப்பனார் நினைவிடம் அருகே மாவட்ட வாரியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை, பெண்களுக்கு தையல் எந்திரம், மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் பி.ஜவகர்பாபு ஏற்பாட்டில் கட்சி அலுவலகத்தில் பணிபுரியும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர் நரேஷ் குமாருக்கு ரூ.65 ஆயிரம் மதிப்பிலான இரு சக்கர வாகனம், மறைந்த 96-வது வட்ட தலைவர் காந்திநகர் சோம்ராஜு குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி ஏழை பெண்களுக்கு தையல் மிஷின், பெண்களுக்கு சேலை, ஆண்களுக்கு பேண்ட்- சர்ட், முதியோருக்கு வேட்டி- சேலை, மாணவர்களுக்கு சீருடை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவற்றை தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.
Tags:    

Similar News