செய்திகள்
கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம்
காளையார்கோவில் அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
காளையார்கோவில்:
காளையார்கோவில் ஒன்றியம் வீரமுத்துப்பட்டி லிங்கமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி , சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 15 வண்டிகள் பங்கேற்றன. இதில் நகரம்பட்டி கண்ணனின் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2 -வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் , 3-வது பரிசை தேனி கூடலூர் ராஜா ஆகியோரது வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயம் மொத்தம் 24 வண்டிகளுக்கு 2 பிரிவாக நடந்தது.
முதல் பிரிவில் முதல் பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 2 -வது பரிசை கல்லல் களஞ்சி அய்யனார், 3-வது பரிசை கொட்டக்குடி கனிஷ்கா ஆகியோரது வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை சிவகங்கை இந்திரா நகர் உமர்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி ஜெகநாதன், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோரது வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
காளையார்கோவில் ஒன்றியம் வீரமுத்துப்பட்டி லிங்கமுத்து முனீஸ்வரர் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரமுத்துப்பட்டி-கொல்லங்குடி சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 39 மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பெரிய மாட்டு வண்டி , சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 15 வண்டிகள் பங்கேற்றன. இதில் நகரம்பட்டி கண்ணனின் மாட்டுவண்டி முதல் பரிசையும், 2 -வது பரிசை தவிட்டான்பட்டி அமர்நாத் , 3-வது பரிசை தேனி கூடலூர் ராஜா ஆகியோரது வண்டியும் பெற்றன. பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயம் மொத்தம் 24 வண்டிகளுக்கு 2 பிரிவாக நடந்தது.
முதல் பிரிவில் முதல் பரிசை பாகனேரி அருள்ஜேசு வண்டியும், 2 -வது பரிசை கல்லல் களஞ்சி அய்யனார், 3-வது பரிசை கொட்டக்குடி கனிஷ்கா ஆகியோரது வண்டியும் பெற்றது.
2-வது பிரிவில் முதல் பரிசை சிவகங்கை இந்திரா நகர் உமர்ராவுத்தர் வண்டியும், 2-வது பரிசை மட்டங்கிப்பட்டி ஜெகநாதன், 3-வது பரிசை மதகுபட்டி வெள்ளைக்கண்ணு ஆகியோரது வண்டியும் பெற்றன.
வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.