செய்திகள்

சிவகங்கையில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்திய மாணவர் கைது

Published On 2017-08-20 12:59 GMT   |   Update On 2017-08-20 12:59 GMT
சிவகங்கையில் காதலிக்க வற்புறுத்தி தகராறு செய்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை:

சிவகாசி அரசு கல்லூரியில் 18 வயது இளம்பெண் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருபவர் சுபாஷ் (வயது 21).

இவர் அந்த மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். இதனை மாணவியிடம் தெரிவித்தபோது அவர் காதலை ஏற்க மறுத்துவிட்டார். ஆனாலும் சுபாஷ், தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

நேற்று கல்லூரி வாசலில் மாணவியை வழிமறித்த சுபாஷ், துப்பட்டாவை பிடித்து இழுத்ததாகவும், அதில் துப்பட்டா கிழிந்து விட்டதாகவும் கல்லூரி முதல்வரிடம், மாணவி புகார் செய்தார்.

இது குறித்து சிவகங்கை நகர் போலீசில் கல்லூரி முதல்வர் அழகுபாண்டி புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் மோகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கல்லூரி மாணவர் சுபாஷை கைது செய்தார்.

Tags:    

Similar News