செய்திகள்

காரைக்குடியில் வீடு புகுந்து நகை - பணம் கொள்ளை

Published On 2017-07-21 15:59 IST   |   Update On 2017-07-21 15:59:00 IST
காரைக்குடியில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் திருடிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி:

காரைக்குடி அருகே உள்ள காயாவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி சுதா (வயது 31). கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் சுதா உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் இரவில் தங்குவது வழக்கம்.

நேற்று இரவு அங்கு தங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வந்த சுதா பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து சோமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 2 பவுன் நகை மற்றும் ரூ. 22 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக புகாரில் சுதா தெரிவித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காரைக்குடி பாப்பா ஊரணியைச் சேர்ந்தவர் முத்து (45). இவர் வெளியூர் சென்றுவிட்டு இரவில் காரைக்குடி பஸ் நிலையம் வந்தார். அப்போது அங்கு நின்ற ஒருவர் முத்துவிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றார். அவரை அக்கம், பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து காரைக்குடி வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்.

இதில் அவரது பெயர் மாரிமுத்து (42) என்பதும், புதுக்கோட்டை இலுப்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

Similar News