செய்திகள்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
ஈரோடு பெருந்துறை ரோட்டில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு ஈரோடு சென்று விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கரை அவர் நடத்தும் ஓட்டல் கடை அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அந்த பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீரமணி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அடுத்த மூலக்கரை பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 38). இவர் அந்த பகுதியில் சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் நேற்று இரவு ஈரோடு சென்று விட்டு மீண்டும் இரு சக்கர வாகனத்தில் பெருந்துறை ரோட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கரை அவர் நடத்தும் ஓட்டல் கடை அருகே வந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு கார் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அந்த பகுதியில் இருந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வீரமணி செல்லும் வழியிலேயே இறந்து விட்டார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.