செய்திகள்

தேவகோட்டை அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி

Published On 2017-07-19 14:41 IST   |   Update On 2017-07-19 14:44:00 IST
தேவகோட்டை அருகே டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லல்:

தேவகோட்டை அருகே உள்ள கள்ளிக்குடியை அடுத்த உடையான் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பத்திநாதன். இவரது மகன் தாஸ் (வயது 32). இவர் நண்பர் ரமேசுடன் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பைக்குடி கிராமத்திற்கு சென்றார்.

அங்கு ஆடுகளை வாங்கி விட்டு வந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென பஞ்சரானது. கோட்டை வயல் பகுதியில் அதனை நிறுத்திவிட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் 2 பேரும் சாலை யோரம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு டிராக்டர்கள் வந்தன. அதில் ஒரு டிராக்டர் எதிர்பாராத விதமாக தாஸ் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட தாஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்துகுறித்து வேலாயுதபட்டிணம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி தேவகோட்டை அகதிகள் முகாமை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சிவா (34)வை கைது செய்தனர்.

விபத்துக்கு காரணமான டிராக்டர் லைட் போடாமல் வந்துள்ளது. அந்த பகுதியில் திருட்டு மணல் எடுத்து வருபவர்கள் வேகமாக செல்வதும் போலீசில் சிக்காமல் தப்பிக்க இரவு நேரத்தில் விளக்கை எரிய விடாமல் டிராக்டர் ஓட்டுவதுமே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது ஏற்பட்ட விபத்தின் போது 4 டிராக்டர்கள் வேகமாக வந்ததாக கூறப்படுவதால் அவை போட்டி போட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News