செய்திகள்
மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலி
மயிலாடுதுறை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே மணல்மேடு கொற்கை அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவருடைய மகன் ராஜசேகர் (வயது 20) விவசாய கூலி. இவரும் அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் இளையராஜா என்பவரும் ஐவாநல்லூரில் உள்ள இவர்களுடைய நண்பர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு கொண்டல் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளியமரத்தில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயமடைந்த ராஜசேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜசேகர் செல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.