செய்திகள்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2017-07-11 23:26 IST   |   Update On 2017-07-11 23:26:00 IST
வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த துளசாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (68). இவருக்கு பாக்கியம் என்ற மனைவியும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

சாமிநாதன் தோல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டிலிருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

இதுகுறித்து சாமிநாதன் மகன் பாரதிராசன் கொடுத்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Similar News