செய்திகள்

குத்தாலம் அருகே விபத்தில் வாலிபர் பலி

Published On 2017-07-06 20:24 IST   |   Update On 2017-07-06 20:25:00 IST
குத்தாலம் அருகே விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். இது குறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா ஸ்ரீகண்டபுரம் அருகே நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மகன் செல்வகுமார் (வயது29) கொத்தனார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில் பாலையூர் சென்றுள்ளார். அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் மோதி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News