எட்டயபுரம் அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
எட்டயபுரம்:
கோவில்பட்டி அருகே உள்ள வடக்கு திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ் (வயது27). இவர் மினரல் வாட்டர் கம்பெனியில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை விளாத்திகுளம் அருகே சித்தவ நாயக்கன்பட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் இரவில் வடக்கு திட்டன்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரி புதூர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து அரசு பஸ் டிரைவர் இனாம் மணியாச்சியை சேர்ந்த பெரியசாமி (55) யிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான வெங்கடேசுக்கு சரண்யா (23) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.