செய்திகள்

கல்வி ஊக்கத் தொகை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

Published On 2017-07-03 16:47 IST   |   Update On 2017-07-03 16:47:00 IST
இந்து மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி ஊக்க தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அண்ணா கலை அரங்கம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்:

இந்து மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி ஊக்க தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் அண்ணா கலை அரங்கம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவராஜ், மேற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார்.

மாவட்ட துணை தலைவர் ஏழுமலை இளைஞர் அணி தலைவர் பாலாஜி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில துணை தலைவர் சோமு ராஜசேகர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.

முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சுதாகர் நன்றி கூறினார்.

Similar News