செய்திகள்

வீட்டில் புகுந்து பணம்-லேப் டாப் கொள்ளை

Published On 2017-06-23 07:10 GMT   |   Update On 2017-06-23 07:10 GMT
வீட்டில் புகுந்து பணம் மற்றும் லேப்டாப் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர்:

வேலூரை சேர்ந்தவர்கள் சக்திவேல் (27), வினோத் (25), வெஸ்லின் (30), காஞ்சீபுரத்தை சேர்ந்தவர் தரணிபூசன். இவர்கள் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை 17-வது தெருவில் வீடு எடுத்து தங்கி சாப்ட்வேர் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று காலை 10 மணியளவில் அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு டிபன் சாப்பிட வெளியில் சென்றனர். அப்போது மர்ம ஆசாமிகள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து 4 லேப்டாப், 4 ஐ போன், ரூ.5000 ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News