செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட்டில் மும்பை செல்ல முயன்ற என்ஜீனியர் சிக்கினார்

Published On 2017-06-19 09:58 GMT   |   Update On 2017-06-19 09:58 GMT
சென்னை விமான நிலையத்தில் போலி டிக்கெட் வைத்திருந்த என்ஜீனியர் அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் நுழைவு பகுதி வழியாக வாலிபர் ஒருவர் சென்றார். சிறிது நேரத்தில் அவர் அதே வழியாக திரும்பி வந்தார்.

சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வேளச்சேரியை சேர்ந்த என்ஜினீயர் மகேஷ்வரன் என்பதும், மும்பைக்கு செல்ல இருந்ததாகவும் கூறினார். அவர் வைத்திருந்த டிக்கெட்டை சோதனை செய்த போது, போலியானது என்பது தெரிந்தது.

மகேஷ்வரன், சென்னை விமான நிலையத்துக்குள் பெண் தோழி ஒருவருடன் வந்து இருக்கிறார். அவருடன் விமான நிலைய புறப்பாடு பகுதி வரை உள்ளே செல்வதற்காக போலி டிக்கெட்டுடன் வந்தாரா? அவருக்கு போலி டிக்கெட் கொடுத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News