செய்திகள்

ஈரோடு கருங்கல்பாளையத்தில் தள்ளு வண்டி வியாபாரி திடீர் மாயம்

Published On 2017-06-14 16:06 IST   |   Update On 2017-06-14 16:06:00 IST
ஈரோடு கருங்கல்பாளையத்தில் தள்ளு வண்டி வியாபாரி திடீர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, கருங்கல்பாளையம், மரப்பாலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது65).

ராமசாமி தள்ளு வண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரத்துக்காக வீட்டை விட்டு சென்ற ராமசாமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பி வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் ராமசாமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். எனினும் ராமசாமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராமசாமி குடும்பத்தினர் புகார் அளித்தனர்.அதில் மாயமான ராமசாமியை மீட்டு தர வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

காணாமல் போன அன்று ராமசாமி வெள்ளை நிற முழுக்கை சட்டையும், புளு கலர் கட்டம்போட்ட லுங்கியும் அணிந்திருந்தார்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ராமசாமியை தேடி வருகிறார்கள்.

Similar News