செய்திகள்
ஈரோட்டில் தீபா பேரவையினர் டி.டி.வி.தினகரன் உருவபடத்தை கிழித்து வீசிய காட்சி.

கொலை மிரட்டல் விடுப்பதா?: தினகரன் உருவபடத்தை கிழித்து வீசிய தீபா பேரவையினர்

Published On 2017-06-13 16:24 IST   |   Update On 2017-06-13 16:25:00 IST
அ.தி.மு.க. ஜெ.தீபா அணி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஈரோடு மாநகர் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே போயஸ் கார்டனில் தீபா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், டி.டி.வி.தினகரனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஈரோடு:

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஈரோடு மாநகர் சார்பில் ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே போயஸ் கார்டனில் தீபா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், டி.டி.வி.தினகரனை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை சரவணகுமார் தலைமை தாங்கினார். வக்கீல்கள் தங்கவேலு, கார்த்திகேயன், டைட்டானிக்தர்மா, செல்லமணி, தங்கமணி, தெட்சிணாமூர்த்தி, சந்திரசேகர், திருநாவுகரசு, மகளிர் அணி செல்வி, கீதா, மாலதி, சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வந்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினார்.

அதற்கு தீபா பேரவையினர், எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘முதலில் ஏன் அனுமதி தந்தீர்கள். இப்போது ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்’’? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்ய முயற்சித்தனர்.

அப்போது தீபா பேரவையினர் டி.டி.வி.தினகரன் உருவ படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து மாநகர் மாவட்ட பொறுப்பாளர் பூக்கடை சரவணகுமார் கூறும்போது, ‘‘போயஸ் கார்டனில் வைத்து தீபா தாக்கப்பட்டு உள்ளார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதனை கண்டித்து நாங்கள் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் அனுமதியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

அப்போது போலீசாரை எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினோம். உடனே வீரப்பன் சத்திரம் போலீசார் எங்களிடம் வந்து இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். முதலில் அனுமதி கொடுத்து விட்டு பின்னர் அனுமதி இல்லை என்கின்றனர். இது என்ன நியாயம்’’! என்று கூறினார்.

Similar News