செய்திகள்

சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Published On 2017-06-13 12:18 IST   |   Update On 2017-06-13 12:18:00 IST
சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் கடத்திய ரூ.5 லட்சம் அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்:

சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது.

அதில் செல்ல இருந்த பயணிகள் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது கட்டு கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது.

இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அமெரிக்க டாலரை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து முகமது பைசலிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News