காதல் திருமணம் செய்த தொழில் அதிபர் தற்கொலை
கோபி:
கோபி சாரதம்பாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). மனைவி பெயர் தனசக்தி (30).
இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். வினோத்குமார் கோபியில் கேட்டரிங் நிறுவனம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக வினோத்குமார் வேதனையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வினோத்குமார் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத்குமார் தற்கொலை செய்வதற்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட தொழில் அதிபர் வினோத்குமார் உடல் பரிசோதனை கோபி அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்டு பிறகு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.