செய்திகள்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2017-05-30 15:53 IST   |   Update On 2017-05-30 15:53:00 IST
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் (பொ) தனசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 1400 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பாலாஜி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News