அரியலூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
ஜெயங்கொண்டம்:
அரியலூரில் இந்தியகம்யூ னிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு கூட்டம் அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதிக்குழு உறுப்பினர் துரை.பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உலகநாதன், துணைச் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லாததாலும், அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகள் எதுவும் செய்திடாத காரணத்தாலும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. எனவே வாகனங்கள் மூலம் சீரான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் ஆலைகளுக்கு விளை நிலங்களை பறிக்கொடுத்து, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்பின்றி தவிக்கும் மக்களுக்காக வாழ்வாதார பாதுகாப்பு கோரிக்கை மாநாடு ஜூன்.27 -ம் தேதி அரியலூரில் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் அரியலூர் கிளை நிர்வாகிகள் நல்லுசாமி, ராசேந்திரன், ராஜேந்திரன், பெரியசாமி, மணிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.