செய்திகள்

புழலில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி

Published On 2017-05-18 14:36 IST   |   Update On 2017-05-18 14:36:00 IST
புழலில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த மாணவர் மீது மின்வயர் பட்டதால் மின்சாரம் தாக்கி பலியானார்.

செங்குன்றம்:

புழல், அந்தோணியார் கோவில் 3-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரது மகன் அரவிந்த் (வயது16) புழல் அருகே உள்ள பாலி டெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று இரவு அவர் அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டு மாடியில் நண்பர்களுடன் நின்றார். அப்போது அருகில் சென்ற மின்வயரில் அரவிந்தின் கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி அவர் பலியானார்.

Similar News