செய்திகள்

ஈரோடு அருகே விபத்து: கணவன்-மனைவி படுகாயம்

Published On 2017-05-12 18:13 IST   |   Update On 2017-05-12 18:13:00 IST
ஈரோடு அருகே விபத்தில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

மொடக்குறிச்சியை அடுத்த அவல்பூந்துறை, வேலாங்காட்டுவலசை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 66). இவரது மனைவி துளசிமணி.

சம்பவத்தன்று சுப்பிரமணி தனது மனைவியுடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வண்டி கஸ்பாபேட்டை அருகில் ஈரோடு-பூந்துறை ரோட்டில் வந்தபோது அவர்கள் முன்னால் ஒரு லாரி சென்று கொண்டி ருந்தது. திடீரென லாரி ரோட்டில் நின்றது.

இதை எதிர்பார்க்காத சுப்பிரமணி லாரியின் பின் பக்கத்தில் மோதினார். இதில் சுப்பிரமணிக்கும் அவரது மனைவி துளசிமணிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News