செய்திகள்

செங்கல்பட்டு ஜெயிலில் கைதி தற்கொலை

Published On 2017-05-06 12:24 IST   |   Update On 2017-05-06 12:24:00 IST
இன்று காலை செங்கல்பட்டு ஜெயிலில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:

சென்னை கோவிலம் பாக்கத்தைச் சேர்ந்தவர் துரை(37).

சிறுமி கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் செங்கல்பட்டு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயிலில் சமையல் பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சிறையில் இருக்கும் அவரை மனைவி, உறவினர்கள் யாரும் பார்க்க வரவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார்.

இன்று காலை துரை சமையல் அறைக்கு சென்று யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு சார் ஆட்சியர் ஜெயசீலன், டி.எஸ்.பி. மதிவாணன், சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News