செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் சாலை மறியல்

Published On 2017-04-28 23:08 IST   |   Update On 2017-04-28 23:08:00 IST
ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ரெட்டிப்பாளையம் அருகேயுள்ள முனியங்குறிச்சி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்துக்கு கடந்த ஒருமாத காலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக்கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று கிராம மக்கள் முனியங்குறிச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீசார் மற்றும் கிரா நிர்வாக அலுவலர் பிரசன்னா மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News