செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

Published On 2017-04-27 16:31 IST   |   Update On 2017-04-27 16:31:00 IST
அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை வருவாய் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் நான்காம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் நாளை(28.04.2017) வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

உடையார்பாளையம் வட்டத்தில் முத்து சேர்வா மடம், பிளிச்சுகுழி, ஓலையூர் கிராமங்களிலும், அரியலூர் வட்டத்தில் புங்கங்குழி, பளிங்காநத்தம் கிராமங்களிலும் நடைபெறுகிறது.

இம்முகாமில் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Similar News