செய்திகள்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2017-04-14 17:27 GMT   |   Update On 2017-04-14 17:28 GMT
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

ஊட்டி:

ஊட்டி மலைரெயில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய இடங்ளில் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோடை சீசனையொட்டி இன்று தமிழ்ப்புத்தாண்டு குதிரை பந்தயம் நடைபெற்றது. குதிரை பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

தமிழகத்தின் பிறபகுதிகளை தவிர கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தந்தனர்.

Similar News