செய்திகள்
வள்ளலார் வாழ்ந்த வடலூரை புனித பூமியாக அறிவிக்ககோரி மனிதச்சங்கிலி போராட்டம்
வள்ளலார் வாழ்ந்த வடலூரை புனித பூமியாக அறிவிக்ககோரி சன்மார்க்க சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
வள்ளலார் வாழ்ந்த வடலூர், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் ஆகிய பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் உள்ளன. அவற்றை அகற்றக்கோரி சன்மார்க்க சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வடலூரில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.
வடலூர் 4 முனை சந்திப்பில் தொடங்கி சத்தியஞான சபை வரை ஏராளமானோர் மனிதச்சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.
போராட்டத்தில் சன்மார்க்க சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வெற்றிவேல் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.