செய்திகள்

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபர்கள்: பொது மக்கள் தர்ம அடி

Published On 2017-04-06 18:35 IST   |   Update On 2017-04-06 18:35:00 IST
ஈரோடு பஸ் நிலைய அருகே ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் செய்த வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள சுவஸ்திக் கார்னர் அருகில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இதன் அருகில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பணம் எடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது ஏ.டி.எம்.அருகே 2 வாலிபர்கள் வந்தனர். அக்கம் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று நோட்டமிட்டு திடீரென அந்த மையத்துக்குள் புகுந்தனர்.

அங்கு பணம் எடுத்து கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.

இந்த சம்பவத்தை அங்கு பணம் எடுக்க வந்த மக்கள் பார்த்து விட்டு அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒரு வாலிபர் தப்பி ஓடி விட்டார். பிடிப்பட்ட மற்றொரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் அந்த வாலிபருக்கு காயம் ஏற்பட்டது.

இதுப்பற்றி வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த வாலிபரை மீட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல்பாளையத்தை சேர்ந்த ஹரி (வயது30) என தெரியவந்தது. தப்பிய ஓடிய வாலிபர் ஹரியின் நண்பர் என கூறப்படுகிறது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News