செய்திகள்
சிவகாசி அருகே திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை
சிவகாசி அருகே திருமணமான 2 ஆண்டில் இளம்பெண் உடலில் மண்எண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்:
சிவகாசி அருகே உள்ள கொத்தனேரியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சங்கீதா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சங்கீதா, தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர், விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.