செய்திகள்

காரைக்குடியில் எச். ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: 70 பேர் கைது

Published On 2017-04-02 18:50 IST   |   Update On 2017-04-02 18:50:00 IST
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காரைக்குடியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி:

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து காரைக்குடியில் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக எச். ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் மாவட்டத்தலைவர் சத்திய மூர்த்தி தலைமையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணி வண்ணணிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் கோ‌ஷங்கள் எழுப்பியபடி ராஜீவ்காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் எச். ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றபோது டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் கைது செய்து உருவ பொம்மையை கைப்பற்றினர்.

மாவட்டத்தலைவர் சத்தியமூர்த்தி, சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் மாங்குடி, நகரத்தலைவர் பாண்டி, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரத்தினம், கோவிலூர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் அழகப்பன், பழனியப்பன், குமரேசன், முன்னாள் கவுன்சிலர் மெய்யர், வக்கீல் சித்திக் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News