செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி

Published On 2017-04-01 17:01 IST   |   Update On 2017-04-01 17:01:00 IST
ஆப்பக்கூடல் அருகே வீட்டு வாசலில் இருந்த பாம்பை தொழிலாளி தெரியாமல் மிதித்ததில் கடித்து விட்டது. இதில் அவர் உயிரிழந்தார்.

ஆப்பக்கூடல்:

ஆப்பக்கூடல் அடுத்த ஒரிச்சேரி, இந்திரநகரை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 43). கூலி தொழிலாளி. மாதப்பன் சம்பவத்தன்று தனது வீட்டு அருகே உள்ள குடிநீர் பைப்பில் தண்ணீர் பிடித்து கொண்டு நடந்து வந்தார். வீட்டு வாசல் அருகே வந்த போது வாசலில் இருந்த பாம்பை கவனிக்காமல் மாதப்பன் மிதித்து விட்டார்.

அப்போது அந்த பாம்பு மாதப்பனை கடித்து விட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாதப்பன் இது குறித்து தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார்.

அவர்கள் மாதப்பனை ஆப்பக்கூடலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாதப்பன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News