எச்.ராஜா ஈரோடு வந்தால் கருப்பு கொடி கட்டுவோம்: காங்கிரசார் அறிவிப்பு
ஈரோடு:
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை இழிவாக பேசியதாக கூறி தமிழ்நாடு முழுவதும் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல் ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஜவான்பவன் முன்பு இன்றுகாலை காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர்கள் சரவணன், காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் ராஜப்பா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலை வர் சுரேஷ், மண்டல தலை வர்கள் ஜாபர்சாதிக், திருச் செல்வம் மற்றும் விஜய கன்னா, பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட தலைவர் ரவி கூறும்போது, ‘‘எச்.ராஜா ஈரோடு வந்தால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம். கருப்புகொடி காட்டுவோம்’’ என்று கூறினார்.