செய்திகள்

பெருந்துறை அருகே லாரி மோதி அரிசி வியாபாரி பலி

Published On 2017-03-29 16:25 IST   |   Update On 2017-03-29 16:25:00 IST
பெருந்துறை அருகே ஸ்கூட்டரில் சென்ற அரிசி வியாபாரி மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு:

பெருந்துறை அருகே உள்ள சரவம்பதி என்ற இடத்தை சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது70). நிதி நிறுவன அதிபரான இவர் அரிசி வியாபாரமும் செய்து வந்தார்.

நேற்று இவர் வேலை வி‌ஷயமாக ஸ்கூட்டரில் குன்னத்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி சென்னியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவர் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சென்னியப்பன் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News