செய்திகள்

வெள்ளகோவிலுக்கு ஈரோடு பஸ்சில் சென்ற பெயிண்டர் திடீர் மரணம்

Published On 2017-03-29 16:15 IST   |   Update On 2017-03-29 16:15:00 IST
ஈரோடு பஸ்சில் சென்ற பெயிண்டர் இருக்கையில் அமர்ந்தபடியே மரணம் அடைந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு:

வெள்ளகோவில் அருகே உள்ள குட்டை காட்டு புதூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). பெயிண்டர். இவர் வேலை வி‌ஷயமாக சென்னை சென்றார். பிறகு அங்கிருந்து ரெயில் மூலம் ஈரோடு வந்தார்.

பிறகு இரவு 10 மணி அளவில் ஈரோட்டிலிருந்து வெள்ளகோவிலுக்கு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தார். பஸ் வெள்ளகோவில் போய் சேர்ந்தது.

பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் கீழே இறங்கி விட்டனர். ஆனால் சின்னசாமி மட்டும் இறங்க வில்லை.

பஸ் டிரைவர்- கண்டக்டரும் சென்று பார்த்த போது இருக்கையில் அமர்ந்தபடியே சின்னசாமி பரிதாபமாக இறந்து கிடந்தார்.

இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். பிறகு அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சின்னசாமி எப்படி இறந்தார்? என்று பிரேத பரிசோதனையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Similar News