செய்திகள்
சீர்காழியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்: 35 பேர் கைது
சீர்காழி பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
சீர்காழி பழைய பேருந்து நிலையம் சாலையில் மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்தனர்.
டில்லி ஜந்தர்மந்தரில் கடந்த 14 நாட்களாக தமிழக டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீர்காழி சட்டமன்ற தொகுதி தலைவர் குமார் தலைமையில் பழைய பேருந்துநிலையத்தில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த சீர்காழி டி.எஸ்.பி சேகர், இன்ஸ்பெக்டர் அழகுதுரை ஆகியோர் மறியலில் ஈடுபட்ட 35 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கபட்டது.