நம்பியூர் அருகே கோவிலில் தற்கொலை செய்த ஐஸ் வியாபாரி
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 56). ஐஸ் வியாபாரி,இவருக்கு அமுதா என்ற மனைவியும், சுப்புலட்சுமி என்ற மகளும், ஜீவா என்ற மகனும் உள்ளனர்.
வேலுச்சாமி இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள கொளக்காடு கருப்பராயன் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்ட அவர் அந்த கோவிலிலேயே தூக்குபோட்டு கொண்டார். இதனால் அவர் சிறிது நேரத்தில் பாதாபமாக இறந்தார்.
இதை கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இது பற்றி அவர்கள் போலீசில் தெரிவித்தனர்.
நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
சேலுச்சாமியின் உடல் பிரேத பாசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது.
குடும்ப தகராறு காரணமாக வேலுச்சாமி கோவிலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.