செய்திகள்
ஆப்பக்கூடல் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்: 3 பேர் கைது
ஆப்பக்கூடல் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடிய 3 பேரை கைது செய்தனர்.
ஆப்பக்கூடல்:
ஆப்பக்கூடல் அருகே உள்ள குதிரை தோட்டம் என்ற பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் அங்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். மேலமருத்தூரை சேர்ந்த ஆறுமுகம், ஒரிசேரிபுதூர் முருகேஷ், அந்தியூரை சேர்ந்த மகேஷ் என்ற அந்த 3பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.10,200 பறிமுதல் செய்யப்பட்டது.