செய்திகள்
பெருந்துறை அருகே சேலையால் தூக்குபோட்டு கல்லூரி மாணவர் தற்கொலை
பெருந்துறை அருகே நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள திருவேங்கடம் பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் அரிகரசுதன் (வயது 18).
இவர் கோவையில் உள்ள ஒருதனியார் கல்லூரியில் பிகாம் முதல் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நோய்க் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் வைத்தியம் பார்த்தும் நோய் குணமாகவில்லை.
இதனால் மனம் உடைந்த நிலையில் அரிகரசுதன் காணப்பட்டார். இதை தொடர்ந்து நேற்று அவர் தனது தாயாரின் சேலையால் பேனில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெருந்துறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் எட்வர்டு ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.