செய்திகள்

காயல்பட்டினத்தில் மரக்கடையில் திருடிய வாலிபர் கைது

Published On 2017-03-16 15:59 GMT   |   Update On 2017-03-16 15:59 GMT
காயல்பட்டினத்தில் மரக்கடையில் மின்மோட்டார், ட்ரில்லிங் மெஷின் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 35). இவர் பஸ் நிலையம் அருகில் உள்ள வண்ணார்குடி தெருவில் பழைய மரங்கள், கதவுகள், ஜன்னல்கள் வாங்கி விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று ஆனந்த் இரவு கடையை அடைத்துவிட்டு சென்றார்.

பின்னர் ஆனந்த் மறுநாள் வந்து பார்த்தபோது உள்ளே இருந்த நீரேற்றும் மின்மோட்டார், மரத்தில் துளையிடும் ட்ரில்லிங் மெஷின் ஆகியவற்றை பின்பக்க சுவற்றில் ஏறி குதித்து மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. 

தனது கடையில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து  காயல்பட்டினத்தில் உள்ள பழைய இரும்புக் கடைகள் மற்றும் மெக்கானிக் கடைகளில் ஆனந்த் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மறுநாள் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பிற்கு  காயல்பட்டினம் வண்ணார்குடி தெருவை ஹசன் பன்னா (23) என்பவர் ஆனந்த் கடையில் திருடப்பட்ட மெஷின் மற்றும் மோட்டார் ஆகியவற்றை விற்க வந்துள்ளார்.

இதுபற்றி அந்த ஒர்க் ஷாப் உரிமையாளர் உடனே ஆனந்துக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆனந்த் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த ஹசன் பன்னாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த மெஷின் மற்றும் மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News