செய்திகள்

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2017-03-16 10:30 GMT   |   Update On 2017-03-16 10:30 GMT
பள்ளிக்கரணையில் மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கரணை:

பள்ளிக்கரணை, நெசவாளர் நகர், வள்ளலார்தெருவை சேர்ந்தவர் ரகுராஜ் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவர் மது குடித்து வந்து வீட்டில் ரகளையில் ஈடுபட்டார். இதனை அவரது மனைவி கண்டித்தார்.

இதனால் மனவேதனையடைந்த ரகுராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல், கோயம்பேடு மேட்டுக்குப்பம் காந்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன். கொத்தனார். இவரது மனைவி சரளா. மணிகண்டன் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு மனைவியுடம் தகராறு செய்து வந்தார்.

நேற்று மது குடித்து விட்டு தகராறில் ஈடுபட்டார். இதை சரளா கண்டித்து திட்டினார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News