செய்திகள்

மறைமலைநகரில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை

Published On 2017-03-11 12:40 IST   |   Update On 2017-03-11 12:40:00 IST
மறைமலைநகரில் குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு:

மறைமலைநகர் தைலாவரத்தை சேர்ந்தவர் ஜீவரத்தினம். இவரது மனைவி காந்தராணி (35). ஜீவரத்தினம் தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார்.

இதனால் மனம் உடைந்த காந்தராணி நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News