செய்திகள்

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2017-03-07 17:19 IST   |   Update On 2017-03-07 17:19:00 IST
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.
ஈரோடு:

பருவ மழை பொய்த்ததால் பவானிசாகர் நீர் மட்டம் மிகவும் குறைந்தது. கடந்த சில நாட்களாகவே 40 அடியிலேயே தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 17 கன அடி தண்ணீரே வந்தது.

‘இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. போகப்...போக குடிநீர் பிரச்சனையும் சூழ்நிலை உள்ளது.

இதன் காரணமாக மழை பெய்ய வேண்டும் என்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமமக்கள் கோவில்களில் நூதனமுறையில் விசே‌ஷ பூஜைகள் செய்து வருகிறார்கள். மசூதிகளிலும் விசே‌ஷ தொழுகை நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது.

இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் ஓரளவு தண்ணீர் நிரம்பியது. அணைகளிலும் அதிக அளவில் தண்ணீர் வந்தது.

நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து உள்ளது.

இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்து வருகிறது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 40.40அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 322 கனஅடி தண்ணீர் வருகிறது.

அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்துமழை பெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் . இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை பெய்ததால் பவானி சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது இன்று நிறுத்தப்பட்டு உள்ளது.

Similar News