செய்திகள்

மொடக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

Published On 2017-03-05 18:11 IST   |   Update On 2017-03-05 18:11:00 IST
மொடக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர், மேட்டு பாளையம், அரிசன காலனியை சேர்ந்தவர் குப்பாள்(வயது60).

சம்பவத்தன்று குப்பாள் ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மேட்டு பாளையம் ஈரோடு-முத்தூர் ரோடு அருகே வந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குப்பாள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசபட்ட குப்பாள் தலையில் பலத்த அடிபட்டு உயிருக்காக போராடினார்.அந்த வழியாக சென்றவர்கள் குப்பாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி குப்பாள் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News