செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியல்

Published On 2017-03-01 21:29 IST   |   Update On 2017-03-01 21:29:00 IST
சம்பளம் உயர்த்தி வழங்க கோரி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு:

தமிழ்நாடு தொலை தொடர்பு (பி.எஸ்.என்.எல்.) ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சுமார் 50 பேர் இன்று ஈரோடு பிரப் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் சண்முகவேல் தலைமையில் திரண்டனர்.

அவர்கள் திடீரென ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

பிறகு அவர்களிடம் போலீசார் சாலை மறியல் போராட்டம் நடத்தக் கூடாது. அதை மீறி ரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்து அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் சாலை ரோத்தில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து அவர்கள் கூறும் போது, ஈரோடு மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல்.லில் 450 ஊழியர்கள் 20 ஆண்களுக்கு மேலாக வேலை பார்த்து வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.5600 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பம் நடத்த கஷ்டமாக உள்ளது.

மத்திய அரசு ஒப்பந்த தொழிலாளர்களுக்க ஒரு நாளைக்கு ரூ.437 வழங்க புதிய உத்தரவு பிறப்பித்தது. ஆனால் எங்களுக்கு பழைய சம்பளம் ரூ250 மட்டுமே மீண்டும் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு புது உத்தரவுப்படி சம்பளத்தை உயர்த்தி குறைந்த பட்சம் மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண் டும். இல்லை என்றால் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றனர். திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News