செய்திகள்

ஈரோட்டில் குடிபோதையில் தூங்கிய தொழிலாளி சாவு

Published On 2017-03-01 17:48 IST   |   Update On 2017-03-01 17:48:00 IST
ஈரோட்டில் குடிபோதையில் தூங்கிய தொழிலாளி சாவு இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு, பி.பெ.அக்ர ஹாரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(48). தொழிலாளி. இவரது மனைவி பாவாயி.

வெங்கடேஷ்க்கு 6 மாதம் முன்பு நடந்த ஒரு விபத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு குடிபழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் வெங்கடேஷ் குடிபோதையில் படுத்திருந்தார். நீண்ட நேரமாகியும் எழுந்திருக்க வில்லை என்று சந்தேகம் அடைந்த அவரது மணைவி வெங்கடேசை எழுப்பி உள்ளனர்.

அப்போது வெங்கடேஷ் பேச்சு மூச்சியின்றி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர் வெங்கடேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News