செய்திகள்

ஓட்டலில் சாப்பிட வந்தவர் செல்போன் திருட்டு

Published On 2017-02-17 16:51 IST   |   Update On 2017-02-17 16:51:00 IST
கோபி அருகே ஓட்டலில் சாப்பிட வந்தவர் செல்போனை 2 மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோபி:

கோபி அருகே உள்ள அரசூர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்ஸ்ரீ (வயது 27). இவர் சத்தியமங்கலம் பகுதியில் 108 ஆம்புலன்சில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மா அரசூர் பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அந்த மெஸ்சில் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 மர்ம ஆசாமிகள் சாப்பிட வந்தனர். பிறகு சாப்பிட்டு விட்டு சென்று விட்டனர்.

அப்போது அங்கு சாப்பிட வந்தவரின் விலை உயர்ந்த செல்போன் ஒன்று காணாமல் போய் விட்டது. இந்த போனை சாப்பிட வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் எடுத்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து ஜெயஸ்ரீ கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப்- இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News