செய்திகள்
பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீக்குளித்த வாலிபருக்கு சிகிச்சை
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தீக்குளித்த வாலிபருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம், பல்லவர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் மூசா (வயது 37) பெயிண்டர். அ.தி.மு.க. தொண்டராக உள்ளார்.
நேற்று மாலை அவர் காஞ்சீபுரம் வணிகர் வீதிக்கு வந்தார். அப்போது முதல்-அமைச்சராக பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என்று கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து மூசாவை மீட்டனர். உடல் கருகிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம், பல்லவர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரது மகன் மூசா (வயது 37) பெயிண்டர். அ.தி.மு.க. தொண்டராக உள்ளார்.
நேற்று மாலை அவர் காஞ்சீபுரம் வணிகர் வீதிக்கு வந்தார். அப்போது முதல்-அமைச்சராக பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என்று கூறி திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து மூசாவை மீட்டனர். உடல் கருகிய அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பலத்த காயம் அடைந்த அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
இச்சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.